மாலக சில்வாவின் விளக்கமறியல் நீடிப்பு
அமைச்சர் மேர்வின் சில்வாவின் மகன் மாலக சில்வா உள்ளிட்ட 6 சந்தேகநபர்களினதும் விளக்கமறியல் நீடிக்கப்பட்டுள்ளது.
கொழும்பு மேலதிக நீதவான் எம். சஹாப்தீன் முன்னிலையில் இன்று ஆஜர்படுத்தப்பட்டதை அடுத்து, எதிர்வரும் 28 ஆம் திகதி வரை சந்தேகநபர்களை தொடர்ந்து விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.
பம்பலப்பிட்டியில் பிரித்தானிய தம்பதியினரை தாக்கிய சம்பவம் தொடர்பில் மாலக்க சில்வா உள்ளிட்ட சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டிருந்தனர்.
இந்த சம்பவம் தொடர்பிலான அடையாள அணிவகுப்பு இன்று முற்பகல் நடத்தப்படவிருந்த போதிலும், சாட்சியாளர்களான வெளிநாட்டு தம்பதியினர் வருகைதராத காரணத்தினால், அடையாள அணிவகுப்பு பிற்பகல் 1.30 வரை பிற்போடப்பட்டது.
பிற்பகல் 1.30 க்கு சந்தேகநபர்கள் மீண்டும் நீதிமன்றத்தில் ஆஜராகியதுடன், இதன்போதும் சாட்சியாளர்கள் பிரசன்னமாகியிருக்கவில்லை என்பதால் அடையாள அணிவகுப்பு நீதிமன்றத்தினால் பிற்போடப்பட்டது.
இதன் பின்னர் அடையாள அணிவகுப்பை இரத்து செய்யுமாறு சந்தேகநபர்கள் சார்பாக நீதிமன்றத்தில் ஆஜராகிய சட்டத்தரணிகள் கோரிக்கை விடுத்தனர்.
இந்த கோரிக்கையை நிராகரித்த நீதவான், சாட்சியாளர்களுக்கு மேலுமொரு சந்தர்ப்பம் வழங்கப்பட வேண்டும் என்றும் சுட்டிக்காட்டியுள்ளார்.
No comments :
Post a Comment