ஹக்கீமை மிரட்டிப் பார்க்கும் அரசாங்கம்..!! அவருக்கு 3 பைல்கள் போடப்படுகிறது
மெளனமாக்க அரசாங்கம் முயற்சித்து வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவரும் நீதி அமைச்சருமான ரவூப் ஹக்கீமுக்கு எதிராக மூன்று கோப்புக்கள் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படவுள்ளதாக அறியக்கிடைக்கின்றது.
1. ரவூப் ஹக்கீம் துறைமுகங்கள் மற்றும் கப்பல் துறை அமைச்சராக இருந்தபோது கேள்விப்பத்திர மோசடிகள்
2.அவரது உதவியாளரான ஹுசைன் ஃபைஸ் மூலம் பணம் பெற்றுக் கொண்டு அரச துறையில் தொழில் வாய்ப்பு பெற்றுக் கொடுத்தமை,
3. தற்கொலை செய்து கொண்ட, முன்னாள் செயலாளர் குமாரி குரேயின் வழக்கு தொடர்பானது
குமாரி குரேயின் தற்கொலை வீடியோ ஆதாரங்களை வைத்திருந்த இரு இலத்தீன் புகைப்படக்காரர்களிடம் சி.ஐ.டியினர் இரண்டு இறுவெட்டுக்களை (CD) பெற்றுக்கொண்டுள்ளதாகவும் இந்த ஆதாரங்கள் ஹக்கீமுக்கு எதிராக குற்றச்சாட்டுக்களை தாக்கல் செய்ய போதுமானதாக இருப்பதால், வழக்கு, C3 என வகைப்படுத்தி விசாரணைகள் முன்னெடுக்கப்படவிருப்பதாகவும்,
மேலும், அவரை பயமுறுத்த இந்த வழக்கை மீண்டும்.தற்போது பாதுகாப்பு அமைச்சின் கீழ் உள்ள சிறப்பு விசாரணை பிரிவு இயக்குனர் ஜெனரல் சந்திரா பெர்னாண்டோ, முன்னாள் பொலிஸ்மா அதிபர்., ஆகியோரின் வழிநடத்தலில் மேற்கொள்ளப்படவுள்ளதாகவும் அறியக்கிடைக்கின்றது.
மேலும், அவரை பயமுறுத்த இந்த வழக்கை மீண்டும்.தற்போது பாதுகாப்பு அமைச்சின் கீழ் உள்ள சிறப்பு விசாரணை பிரிவு இயக்குனர் ஜெனரல் சந்திரா பெர்னாண்டோ, முன்னாள் பொலிஸ்மா அதிபர்., ஆகியோரின் வழிநடத்தலில் மேற்கொள்ளப்படவுள்ளதாகவும் அறியக்கிடைக்கின்றது.
என்று த இன்டிபென்டன்ட் இணையத்தளம் செய்தி வெளியிட்டுள்ளது.
No comments :
Post a Comment