ஹன்ஷிப் பில்லா தமிழ் இணையத்தளம்

ஹன்ஷிப் பில்லா தமிழ் இணையத்தளம்

Thursday, November 27, 2014

மைத்திரியின் சின்னம் புறா..!! ரிஷாத் கட்சி யாரை ஆதரவளிப்பது என்பதில் தடுமாற்றம் 29 முடிவு

எதிர்க் கட்சியின் ஜனாதிபதித் தேர்தலுக்கான பொது வேட்பாளர் மைத்திரிபால சிரிசேன “எமது மக்கள் முன்னணி” எனும் பெயரிலும் புறா சின்னத்திலும் போட்டியிடவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
மைத்திரிபால சிரிசேனவுடன் ஐக்கிய தேசியக் கட்சியின் காரியாலயத்தில் நேற்று மாலை இடம்பெற்ற கலந்துரையாடலில் இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது. இக்கலந்துரையாடலில் ஹெல உறுமயவின் பாராளுமன்ற உறுப்பினர் பாட்டளி சம்பிக்க ரணவக்கவும் கலந்துகொண்டுள்ளதாகவும்  தெரிவிக்கப்படுகின்றது

 எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் யாருக்கு ஆதரவு அளிப்பது என்பது தொடர்பில் அகில இலங்கை மக்கள் (முஸ்லிம்) காங்கிரஸ் எதிர்வரும் சனிக்கிழமையன்று தீர்மானிக்கவுள்ளது.
கட்சியின் உயர்பீடக்குழு இந்த தீர்மானத்தை மேற்கொள்ளவுள்ளது.
ஏற்கனவே அரசாங்கத்தில் அங்கம் வகிக்கும் கிழக்கு மாகாண சபையின் மூன்று உறுப்பினர்கள் நேற்று சுயாதீனமாக செயற்பட முடிவெடுத்தனர்.
கடந்த திங்கட்கிழமை கட்சியின் உயர்பீடம் எடுத்த முடிவுக்கு அமையவே இந்த விலகல் இடம்பெற்றது.
அதேநேரம் இன்று வன்னி நாடாளுமன்ற உறுப்பினர் ஹுனைஸ் பாரூக்கும் ஐக்கிய தேசியக்கட்சியில் இணைந்து கொண்டார்.
இந்தநிலையில் மைத்திரிபால சிறிசேனவுக்கா. மஹிந்தவுக்கா? தமது ஆதரவு என்பது தொடர்பில் கட்சியின் தலைவர் அமைச்சர் ரிசாத் பதியூதீன் தலைமையில் கட்சியின் உயர்பீடம் ஹபரணையில் கூடி முடிவெடுக்கவுள்ளது.

No comments :

Post a Comment