Thursday, November 27, 2014
துபாய் ஷாப்பிங் திருவிழாவில் உலக சாதனை படைக்கும் தங்கசங்கிலி
துபாய்: துபாயில் அடுத்த ஆண்டு ஜனவரி 1 முதல் பிப்ரவரி 1 வரை, ‘துபாய் ஷாப்பிங் திருவிழா’ நடக்கவுள்ளது. இதனையொட்டி, துபாயில் உள்ள 500க்கும் அதிகமான தங்க நகை நிறுவனங்கள், சில்லரை விற்பனையாளர்கள் மற்றும் நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் இணைந்து உலகின் நீளமான தங்க சங்கிலியை தயாரித்து வருகின்றனர். இதன் நீளம் சுமார் 5 கிலோ மீட்டருக்கு அதிகமாக இருக்கும். இதற்காக 160 முதல் 200 கிலோ வரையில் தங்கம் பயன்படுத்தப்படுகிறது. 2015ம் ஆண்டு ஜனவரி 2ம் தேதி மக்கள் பார்வைக்கு வைக்கப்படுகிறது. துபாய் ஷாப்பிங் திருவிழாவையொட்டி 100 கிலோ தங்கம் குலுக்கல் முறையில் வாடிக்கையாளர்களுக்கு பரிசளிக்கப்படும் எனறும் துபாய் ஷாப்பிங் திருவிழா அமைப்பாளர்கள் தெரிவித்தனர்.
Subscribe to:
Post Comments
(
Atom
)
No comments :
Post a Comment