சம்மாந்துறையில் ஹிருனிகா ஆற்றிய உரையின் சுருக்கக் குறிப்பும்,முக்கிய சுட்டிக் காட்டல்களும்
முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா சார்பாக சம்மாந்துறை வாழ் மக்கள் மைத்திரியை அதரித்தமைக்கு நன்றி செலுத்துமுகமாக ஹிருனிகா வரப்போகிறார் என்ற செய்தியால் சம்மாந்துறை அப்துல் மஜீத் மண்டபம் இன்று ஞாயற்றுக் கிழமை 2015-02-08 மக்களால் வெள்ளத்தால் நிரம்பி வழிந்தது.தொழில் அதிபர் ரமீஸ் அவர்களின் ஏற்பாட்டில் 5 மணி அளவில் ஆரம்பமான இன் நிகழ்விற்கு பிரதம அதிதிகளாக மேல் மாகாண சபை உறுப்பினரான ஹிருனிகா,ஜனாதிபதியின் சகோதரர் டட்லி சிறிசேன ஆகியோர் கலந்து கொண்டனர்.
இன் நிகழ்விற்கு வருகை தந்த ஹிருனிகா சில நிமிடங்களில் தனக்கு ஏற்பட்ட களைப்பின் காரணமாக மண்டபத்தை விட்டு வெளியேறினார்.அவரின் வெளியேற்றத்தைத் தொடர்ந்து மண்டபம் வெறிச் சோடிக் காணப்பட்டதானது அங்கு கூடி இருந்த மக்கள் ஹிருனிக்காவிற்காகவே கூடி உள்ளார்கள் என்பது தெளிவானது.
ஹிருனிகா தனது உரையில் நாம் தற்போது நாட்டிலிருந்து குடும்ப ஆட்சி ஒன்றை இல்லாதோழித்துள்ளோம்.இதற்கு சிறுபான்மையினரான தமிழ் முஸ்லிம் மக்கள் வாக்குகள் மிகவும் உதவி இருந்தன.இதன் மூலம் நீங்கள் ஆட்சியாளர்களுக்கு ஒரு செய்தியை கூறியுள்ளீர்கள்.அது தான் “யார் மகிந்த போன்று நடந்தாலும் இதே நிலை தான் வரும்” என்ற செய்தியாகும்.கடந்த ஆட்சி போன்று ஜனாதிபதி மைத்திரி நடந்தாலும் அவருக்கும் இதே நிலை தான் வரும்.ஆனால்,அவர் அவ்வாறு நடக்க மாட்டார் என்பதனை நான் உறுதியாக கூறிக் கொள்கிறேன்.ஒரு உண்மையான பௌத்தன் இன்னுமொரு மதத்தினை அடி பணிய வைக்கும் ஒரு செயலைச் செய்ய மாட்டன்.நான் ஒரு உண்மையான பௌத்தன்.இதே போன்றே தற்போது தெரிவாகியுள்ள மைத்திரியும் உண்மையான பௌத்தத் மதத்தினைச் சேர்ந்த ஒருவர்.
இன்று நான் முஸ்லிம் பகுதிகளுக்கு வருவதற்குக் காரணம்.எனக்கும் முஸ்லிம்களுக்கும் உள்ள நெருக்கமான உறவே ஆகும்.கொழும்பில் என்னைக் கேட்டால் இதனை அறியலாம்.எனது தந்தை பாரத லக்சுமனும் முஸ்லிம்களுடன் நெருங்கி பழகும் ஒருவர்.அப் பகுதியில் வசிக்கும் முஸ்லிம்கள் ஏதும் பிரச்சனை என்றால் முஸ்லிம் அரசியல் வாதிகளிடம் செல்வதனை விட எனது தந்தையிடமே அதிகம் வருவார்கள்.எனக்கு நன்றாக நினைவிருக்கின்றது ,எனது சிறு வயதில் பள்ளிப் பிரச்சனை ஒன்றிற்கு கூட எனது தந்தையிடம் முஸ்லிம்கள் முறையிட வந்திருந்தாள்.அந்தளவிற்கு எனது தந்தை முஸ்லிம்களுடன் உறவைக் கொண்டிருந்த ஒருவர்.நானும் அவர் வழியிலேயே உள்ளேன்.
நான் இப் பகுதியின் பல பிரதேசங்களிற்கு சென்று வருகிறேன்.இங்குள்ள பிரச்சனைகள் பற்றி கேட்டறிந்துள்ளேன்.இதனை நிச்சயாமாக ஜனாதிபதியின் மேலான கவனத்திற்கு கொண்டு செல்வேன்.இங்குள்ள மீனவர்கள்,விவசாயிகள் அதிகம் பிரச்சனையினை எதிர் நோக்குகிறார்கள்.வீடுகள் இல்லாமலும், சிறந்த ஆட்சியாளர்கள் இல்லாமலும் இன்னல்களிற்கு உள்ளாகியுள்ளார்கள்.இன்னும் சில மாதங்களில் பொதுத் தேர்தல் ஒன்று நடைபெற உள்ளது.அதில் நீங்கள் விரும்பும் ஆட்சியாளர்களை தெரிவு செய்து கொள்ளுங்கள்.கடந்த 5 வருடங்களிற்கு பிறகு கூட சிலர் உங்களிடம் வரலாம்.அவர்களிற்கு சிறந்த பாடம் புகட்டுங்கள்.உங்கள் பிரச்னையை என்னிடம் முறையிடுங்கள் .நான் ஜனாதிபதியின் கவனத்திற்கு கொண்டு செல்கிறேன்.எனக் கூறினார்.
ஹிருனிகாவினது உரையானது எதிர் வருகின்ற பொதுத் தேர்தலை மையமாகக் கொண்டுள்ளது என்பனை அவரின் உரை பொதுத் தேர்தலினை மையப் படுத்தி இருந்தமை குறிப்பிடத்தக்கது.
nice yeahhhhhhhhhhhhh
ReplyDelete