நிந்தவூரில் சற்று முன்னர் வாகன விபத்து ! ஒருவரின் நிலை கவலைக்கிடம் !
நிந்தவூர் பிரதான வீதியில் (மஸ்ஜிதுல் முஜாஹிதீன் பள்ளிவாசலுக்கு முன்பாக) இன்று (15) சற்று முன்னர் இரண்டு மோட்டார் சைக்கிள்கள் ஒன்றோடொன்று நேரே மோதுண்டதால் மோட்டார் சைக்கிளில் பயணித்த அனைவரும் பலத்த காயங்களுக்கு உள்ளான நிலையில் நிந்தவூர் மாவட்ட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இதில் விபத்து சம்பவம் இடம்பெற்ற இடத்தில் ஒருவர் மிகவும் கவலைக்கிடமான நிலையில் காணப்பட்டதோடு மற்றுமொருவர் மயக்கமுற்ற நிலையிலும் வைத்தியசாலையில் அனுமதிக்கப் பட்டுள்ளார். இதேவேளை குறித்த விபத்து சம்பவத்தில் மோட்டார் சைக்கிள் ஒன்று முன்னால் சென்ற வாகனத்தை முந்திக்கொள்ள முற்பட்ட வேளையிலேயே இந்த விபத்து நடந்துள்ளதாக நேரில் கண்டவர்கள் தெரிவித்தனர்.
மேலும் விபத்து இடம்பெற்ற இடத்தில் பொலிசாரின் ஜீப் வண்டி தரித்திரிந்தமையினால் விபத்தில் பாதிக்கப்பட்டவர்களை பொலிசார் உடனடியாக வைத்தியசாலைக்கு கொண்டுசென்றனர்.
இதேவேளை இந்த விபத்து சம்பந்தமான மேலதிக விசாரணைகளை சம்மாந்துறைப் பொலிசார் மேற்கொண்டு வருகின்றனர். (படம்கள் சுலைமான் றாபி )
No comments :
Post a Comment