சம்மாந்துறையின் பாராளுமன்றப் பிரதிநிதித்துவம் மர்ஹும் எம்.எச்.எம் அஷ;ரபின் மரணத்தின் பின் கேள்விக்குறியாக்கப்பட்டாலும் நீண்டகாலமாக தக்கவைத்த பிரதிநிதித்துவம் மர்ஹும் அன்வர் இஸ்மாயிலின் மரணத்தின் பின் நிரந்தரமாக இழக்கப்பட்டதாகவே மக்கள் உணர்கின்றனர்.
கடந்த பாராளுமன்றத் தேர்தலில் சம்மாந்துறைத் தொகுதிக்கான பாராளுமன்றப் பிரதி நிதித்துவம் இழக்கப்பட்டது. இதனால் சம்மாந்துறை மண் பல இழப்புகளை எதிர்நோக்கியது என்பதில் முரண்பாடான கருத்திருக்க முடியாது.
இப்பாராளுமன்றப் பிரதிநிதிதுவம் இழக்கப்பட்டமைக்கான பல காரனங்கள் கூறப்பட்டது. தற்போதும் கூறப்பட்டும் வருகிறது. அவைகளை நாம் ஆராய்வதை விடவும் எதிர்வரும் தேர்தலில் எவ்வாறு எமது பாராளுமன்றப் பிரதி நிதித்துவத்தை தக்கவைக்க முடியும் என்பதற்கான வியூகத்தை அமைப்பதே சிறந்ததாகும்.
இன்று சம்மாந்துறையின் நிலைப்பாடானது, பாராளுமன்றப் பிரதி நிதித்துவதை பெறுவது தொடர்பாக மக்களும், கட்சிகளும், வேட்பாளர்களாக போட்டியிட எத்தனிப்பவர்களும்; இதற்காக ஆர்வமாகவும், அதிரடி நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருவதாகவும் உள்ளதனை அறியமுடிகின்றது. இந்த ஆர்வமும், உத்வேகமும் ஒரு பாராளுமன்றப் பிரதி நிதித்துவத்தை சம்மாந்துறை மண் பெற்றுக் கொள்வதற்கான சரியான வியூகமாக அமையுமா? அல்லது மீண்டும் பிரதிநிதித்துவதை இழக்கவைக்குமா?
சம்மாந்துறையின் அரசியல் நிலைப்பாட்டை பார்தால் மு.கா சார்பாக போட்டியிடுவதற்கு சிலர் முண்டியடித்துக் கொன்டும், ஐ.தே.க சார்பாக ஒருவரும், சு.க சார்பாக சிலரும், இவைகளுக்கு புறம்பாக சுயற்சை குழுக்களும் களமிறங்க தயார் படுத்தப்பட்டுவருவதாக தகவல் கிடைக்கின்றது. இச் சூழ்நிலையானது தொடரப்படுமாயின் சம்மாந்துறையின் பாராளுமன்றப் பிரதிநிதித்துவதை இழக்கச் செய்யும் என்பதில் எவ்வித சந்தேகமும் இல்லை.
இங்கு போட்டியிடுவதற்கு தயாராக இருப்பவர்களும், கட்சிகளும், சுயட்சைக்குளுக்களும் சம்மாந்துறை மண்ணின் பாராளுமன்றப் பிரதி நிதித்துவத்தை தக்கவைப்பதற்காக களமிறங்க உள்ளார்கள் என்பதை விட அவர்களின் மனோ இச்சைக்கு தீணி போடுவதற்கான ஒர் களமாகவே இத்தேர்தல் களம் அமையும் என்பது உறுதியாகி வருகின்றது. இதனை ஊருக்கு எம்.பி என கூறுபவர்களின் தனிப்பட்ட நிகழ்ச்சி நிரலை பார்க்கும் போது தெளிவாகின்றது.
மு.காவின் சம்மாந்துறையின் நிலையை பார்த்தால் சானக்கியத் தலைவர் மு.காவின் தொண்டர்களை 4 துருவமாக்கி அரசியல் நடத்துகின்றார். முஸ்தபா லோயருக்கு கடந்த மாகாண சபை தேர்தலின் போது சீட்டு தருவதாக கூறப்பட்டு அதற்கான வேலையும் செய்ய அவர் அனுமதிக்கப்பட்டார் என்பது பரவலாக பேசப்பட்ட விடயம். ஆனால் தற்போது அமைச்சர் மன்சூரின் தரப்பு தலைவரின் நிகழ்ச்சி நிரலில் அவ்விடயம் மாற்றப்பட்டுள்ளதாக கூறுகின்றது. இவ்விரு தரப்புக்குமிடையிலான மோதலை சாதகமாக பயன்படுத்த எத்தனிக்கும் மற்றய தரப்பாக மாஹீர் தரப்பும் இவ்வாறான இழுபறிக்கு மத்தியில் தலைவரை புகழாரம் பாடி, தலைவருக்கு துப்புக்கொடுக்கும் ஒரு கூட்டமும் காணப்படுகின்றது. இச்சூழலில் மு.கா மூலம் எம்.பி கிடைப்பதற்கான வாய்ப்பு கேள்விக் குறியாக உள்ளது எனலாம்.
இவ்வாறான சவால்களுக்கு புறம்பாக சில தரகுக்காரர்களின் செயல்களுக்கும் முகங்கொடுக்க வேண்டும். இதற்கு சிறந்த சான்றாக ஊருக்கு எம்.பி வேண்டும் என வாய் கிழியக் கத்தும் மூத்த போரளிகள், அன்வர் இஸ்மாயில் தேர்தலில் இறங்கிய போது கல்முனை, பொத்துவில் பிரதி நிதிகளுக்கு வாக்குக் கேட்டு புழைப்பு நடாத்தி பழக்கப்பட்டவர்களும், இன்னும் சிலர் யாருக்கு வக்காலத்து வாங்கினால் தவிசாளராகலாம் என பார்த்து அரசியல் புழைப்பு நடத்தி தவிசாளர் கனவில் மிதந்து கொண்டிருக்கின்றார்ள். இன்னும் சிலர் கயஉந டிழழமல் சம்மாந்துறைக்கு எம்.பி, ஆPஊ, அபிவிருத்தி என காரசாரமாக எழுதி வருகின்றனர். ஆனால், அவர்கள் மாகாணசபைத் தேர்தலின் போது ஜெமீலுக்கும், தவத்துக்கும் வேலை செய்து புழைப்பு நடத்தினார்கள். அபிவிருத்தி என்பார்கள் நாமல் ஒயாவில் கொந்தறாத்து செய்வார்கள். எதிர்வரும் தேர்தலில் ஹரீஸ் வேட்பாளருக்கு வாக்கு பெற்றுக் கொடுக்க கடமைப்பட்டுள்ளார்கள். எனவே இவர்கள் எம்.பி என முதலைக் கண்ணீர் வடிக்கின்றனர். இவ்வாறான சித்து விளையாட்டுக்குள் மு.காவில் எவ்வாறு எம்.பி சாத்தியம்.
அதே போன்று ஜ.தே.க, சு.க வேட்பாளர்கள் தங்களுக்குள்ளவாக்குகள் பிரதி நிதித்துவதை பெறுவதற்கு போதாது என அறிந்தும், கட்சியில் தங்களின் நிலையை தொடர்ந்தும் தக்கவைப்பதற்காக களமிறங்கி, சிங்களவர்களை எம்.பியாக்கும் கைங்கரியத்தை இம்முறையும் அரங்கேற்றுவார்கள் என்பதில் எவ்வித ஐயமுமில்லை.
மற்றுமொரு தெரிவாக காணப்படும் சுயட்சை குழு, இது யார்? இவர்களின் பின்புலம் என்ன? இவர்களின் அக்கரைக்கான காரனம் என்ன? இவர்கள் ஏஜெண்டுகளா? ஏன்ற பலதரப்பட்ட கேள்விகளுக்கு ஆய்வு மூலம் விடை தேடுவது அவசியமாகும்.
'ஆடு நனையிதுன்டு ஓநாய் அழுவுதாம்' ஏன்கின்ற நிலைப்பாடே சுயற்சை குழுக்களின் நிலைப்பாடாகும். அதாவது சம்மாந்துறையின் பாராளமன்றப் பிரதிநிதித்துவம் இழக்கப்படக் கூடாதென வரிந்துகட்டிக் கொன்டு களமிறங்கப் போவதாக கூறி சிலர் தங்களின் இலாபங்களை அடிப்படையான நோக்காக வைத்து அவர்களின் டீழளள யின் வேண்டுகோளை நிறைவேற்றி அவரின் திருப்தியை பெறுவதற்காகவும் டீழளள யின் அரசியல் அஜன்டாவை நடைமுறைபடுத்தவுமே இந்த சுயற்சை அரசியல் என்கின்ற நாடகம் அரங்கேற்றப்படத் திட்டமிடப்பட்டுள்ளது என்பது தெளிவாகின்றது.
'யார் என்றால் எமகென்ன யார் குத்தினாலும் அரிசான சரிதானே' என்பது நியாயம் தான். அவ்வாறு பாராளுமன்றப் பிரதிநிதித்துவம் கிடைத்தால் அவ்வாதம் சரிதான் ஆனால் இங்குநிறைவேற்றப்பட இருக்கும் நாடகம் அதுவல்ல என்பதையும் மக்கள் உணர்ந்து கொள்ளவேண்டும்.
மு.காவாக இருந்தாலும், அகில இலங்கை மக்கள் காங்கிரசாக இருந்தாலும், தே.க இருந்தாலும் கூசா தூக்கும் அரசியலுக்கப்பால் செயற்படமாட்டார்கள் என்பதை கடந்த ஆட்சியில் உணர்ந்து கொண்டோம். இவர்களின் அரசியல் இருப்பைத் தக்கவைப்பதற்காகவே கடந்த ஜனாதிபதி தேர்தலில் இறுதித் தறுவாயில் எமது சமூகம் சார்பாக எந்தவிதமான கோரிக்கையுமின்றி அவசரப்பட்டுக்கொண்டும், முண்டியடித்துக் கொண்டும் இணைந்தார்கள் அது அவர்களின் பதவியை தக்கவைப்பதற்காகவே என்பதற்கு சிறந்த சான்றாகும்.
மு.கா தற்போது அம்பாரை மாவட்டத்தில் சற்று நிலைகுலைந்தும், மக்கள் மத்தியில் அதிர்ப்திக்குமுள்ளாகியுள்ளது என்பதில் உண்மையில்லாமல் இல்லை. இத்தருணத்தை சரியாக பயன்படுத்தி மு.காவுக்கும் அ.இ.ம.கா க்கும் இடையிலான பலத்தைப் பரீட்சிக்கும் களமாகவே எதிர்வரும் தேர்தலை பயன்படுத்தவுள்ளனர்.
அதாவது மு.காவின் இதயமாகிய அம்பாறையில் மு.காவின் பலத்தைக் குறைப்பற்காக சம்மாந்துறை மக்களின் பாராளுமன்றப் பிரதிநிதித்துவத்தை பலிகொடுக்கும் முயற்சியிலேயே சுயற்சை என்ற நாமத்துடன் களமிறங்க தயார்படுத்தப்பட்டுள்ளது. மு.கா மூலம் கிடைக்கவிருக்கும் பாராளுமன்றப்பிரதிநிதித்துவதை இல்லாமலாக்குகிறார் என்பதல்ல இதன் கருத்து. மாறாக சம்மாந்துறையின் பிரதிநிதித்துவம் எவ்வாறேனும் இழக்கப்பட்டால் தனது அம்பாறை மாவட்ட அரசியலை சம்மாந்துறையிலிருந்து ஆரம்பிக்கவே எதிர்வரும் தேர்தலை அதற்கான பரீட்சை களமாக மாற்ற இருக்கின்றனர். அதிகாரத்துக்காக இவ்வாறான நரிதந்திரங்களை பயன்படுத்தி மக்களை ஏமாற்ற நினைக்கும் எந்த அரசியல் வாதியாயினும் மக்கள் அவர்களை நிராகரிக்கவேண்டும்.
இறுதியாகப் பார்த்தால் சம்மாந்துறையின் பாராளுமன்றப் பிரதிநிதித்துவத்தை பாதுகாப்பதாக கூறிஅனைவரும் களமிறங்கி அப்பிரதிநிதித்துவதை இழக்கவைக்கவே முயற்சிக்கின்றனர். ஊருக்கு எம்.பி வேண்டும் என்பவர்களுக்கிடையில் ஒற்றுமைப்பட்டு ஒரு வியூகத்தை அமைத்து அதன் பிரகாரம் செயற்பட முடியாதவர்கள் தங்களுக்கு தாங்களே கணக்கு காட்டிக்கொன்டு 40000 ஆயிரம் மக்கள் ஒற்றுமைப்பட்டு அவர்களுக்கு வாக்களிக்க வேண்டுமென எதிர்பார்க்கின்றனர். இது எவ்வாறு சாத்தியம்? எனவே இவர்கள் ஒற்றுமைப்படாது ஊருக்கு எம்.பி வேண்டும் என கூறும் கோசம் வேறும் 'வேசமாகவே' காணப்படுகிறது.
No comments :
Post a Comment