சவுதியில் எஜமானரை கொன்ற நபருக்கு அந்நாட்டு அரசு மரண தண்டனையை நிறைவேற்றியுள்ளது.
சவுதியில் கொலை, கொள்ளை,கற்பழிப்பு, போதைப் பொருள் கடத்தல், கள்ளத் தொடர்பு, கடவுளை நிந்திப்பது ஆகியவற்றுக்கு மரண தண்டனை விதிக்கப்படுகிறது.
இந்நிலையில் பிலிப்பைன்ஸ் நாட்டை சேர்ந்த ஜோவன் எஸ்டீவா என்ற நபர் சவுதியில் ஓட்டுநராய் பணியாற்றி வந்துள்ளார்.
இவர் கடந்த 2007ம் ஆண்டில் தனது எஜமானரின் மார்பில் கத்தியால் குத்தி படுகொலை செய்ததால் கைது செய்யப்பட்டார்.
இவர் மீது இருந்த குற்றம் உறுதி செய்யப்பட்டதையடுத்து, இவரை தலை துண்டித்து மரண தண்டனை நிறைவேற்ற அந்நாட்டு நீதிமன்றம் உத்தரவிட்டது.
அதன்படி நேற்று அவரது தலை துண்டித்து தண்டனை நிறைவேற்றப்பட்டது. மேலும் இவருடன் இந்தாண்டில் இதுவரை சவுதியில் 40 பேரின் தலைத் துண்டிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
No comments :
Post a Comment