ஹன்ஷிப் பில்லா தமிழ் இணையத்தளம்

ஹன்ஷிப் பில்லா தமிழ் இணையத்தளம்

Tuesday, March 10, 2015

வீடுகளில் உலாவும் திருடர்கள்....வருகிறது கண்காணிப்பு கமெரா

பிரித்தானியாவில் உள்ள அனைத்து வீடுகள் மற்றும் வர்த்தக நிறுவன கட்டிடங்களில் கண்காணிப்பு கமெராவை பொருத்த வேண்டும் என காவல் துறை ஆணையர் வலியுறுத்தியுள்ளார்.
இதுகுறித்து ஆணையர் Sir Bernard Hogan-Howe வெளியிட்ட அறிக்கையில், கொலை மற்றும் கொள்ளை சம்பவங்களில் ஈடுபடும் குற்றவாளிகளை எளிதில் கண்டுபிடிக்கும் வகையில், பொலிசாருக்கு உதவ பொது மக்கள் முன் வர வேண்டும்.
இதனை செயல்படுத்த பிரித்தானியாவில் அனைத்து வீடுகள் மற்றும் வர்த்தக நிறுவன கட்டங்களில் இரண்டு கண்காணிப்பு கமெராக்களை பொருத்த வேண்டியது அவசியம்.
இதில் ஒரு கமெரா அந்த பகுதி முழுவதையும் படம் பிடிக்கும் வகையிலும், மற்றொரு கமெரா நபர்களின் முகங்களை தெளிவாக படம் பிடிக்கும் வகையிலும் இருக்க வேண்டும் என கூறப்பட்டுள்ளது.
ஆனால் கமெராக்களை வீட்டில் பொருத்துவதால் தங்களது தனி உரிமை மற்றும் அந்தரங்கள் பாதிக்கப்படும் என ஆணையரின் இந்த திட்டத்திற்கு சில அமைப்புகள் எதிர்ப்பு தெரிவித்துள்ளன.
இதற்கு பதிலளித்த ஆணையர் பேசியதாவது, தற்போது கொலை மற்றும் கொள்ளை அதிகரித்து வரும் நிலையில், திருடர்களை கண்டுபிடிக்க உதவும் தொழில்நுட்பங்களும் வளர்ந்துள்ளது.
அந்தரங்கள் அவசியமானதாக கருதினாலும், பொதுமக்களின் பாதுகாப்பில் பொலிசாருக்கு பெரும்பங்கு உள்ளதால், இத்திட்டத்தை செயல்படுத்த ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என பேசியுள்ளார்.
மேலும் பிரித்தானியாவில் ஏற்கனவே சில வீடுகள் மற்றும் வர்த்தக நிறுவன கட்டிடங்களில் கண்காணிப்பு கமெராக்கள் பொருத்தப்பட்டிருப்பதால், இந்த திட்டம் செயல்பாட்டிற்கு வருவதன் மூலம் குற்றங்கள் பெருமளவில் குறையும் என பொலிஸ் அதிகாரிகள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.

No comments :

Post a Comment